இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கேரளாவைக் கலக்கும் இணைய விபச்சாரம்!

E-mail அச்செடுக்க

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நல்ல விஷயத்திற்காகவும் கெட்ட விஷயத்திற்காகவும் பயன்படுத்த முடியும். அதனை மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது அது. இதற்குத் தொலைகாட்சி முதல் ராடார் வரை அநேக உதாரணங்களைக் கூறலாம். அந்தப் பட்டியலில் இணையமும் அடங்கும்.


இணையம் ஒரு கட்டில்லா களஞ்சியமாகும். சிறு குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரை அனைவருக்கும் பல விதங்களில் அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கடல் போல் அடக்கி வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

இன்று இணையம் மூலம் வியாபாரம் என்பது இந்த நூற்றாண்டின் இணையற்ற புரட்சிகளில் ஒன்றாகும். வியாபாரம் என்றால்.... என்ன வியாபாரம் வேண்டுமானாலுமா? என்றொரு கேள்வி எழுவது இயல்பு!

அதற்கு விடையளிக்கும் விதத்தில் முன்னுதாரணமாக, இந்தியாவிலேயே கல்வியறிவில் முன்னணியில் நிற்கும் மாநிலம் என மெச்சிக் கொள்ளும் கேரள மாநிலம் நிற்கிறது. ஆம், இணையம் மூலமாக பெண்/ஆண் வியாபாரம் கேரளாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

இதனை ஆதாரப்பூர்வமாக மனோரமா நியூஸ் என்ற கேரள ஊடகமே வெளிக்கொணர்ந்துள்ளது. மனோரமா நியூஸின் புலனாய்வு நிருபர்கள் குழு ஒன்று, தங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியக் கூடிய சாத்தியம் உள்ள இந்த அபாரச் செயலைச் செய்துள்ளனர்.

கொச்சியை மையமாக வைத்து இயங்கும் ஒரு மிகப் பெரிய "இணைய விபச்சார குழுவினைக்" குறித்த செய்தியினை வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் வெளிக் கொணர்ந்துள்ளனர்.

பல்வேறு "girlsfinder" போன்ற ஆபாச தளங்களில் தொடர்பு கொள்க என்ற பெயரில் தங்களின் மார்க்கட்டிங் தொலைபேசி எண்களைப் போட்டு வைத்துள்ளனர். அதில், தொடர்பு கொள்ளும் நபர்களை வசதிக்கு ஏற்பவும் செல்லும் நேரத்திற்கு ஏற்பவும் 1 மணி நேரத்திற்குக் குறைந்தது 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை பேரம்பேசி பெண்களை அனுப்புகின்றனர்.

இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில், இவ்வாறு அனுப்பப்படும் பெண்களில் கல்லூரி மாணவிகளும் உள்ளது தான். கல்லூரி மாணவி வேண்டும் என கேட்டால் அதற்கு ஏற்ப பேரமதிப்பு ஏறும் அவ்வளவே!

கல்லூரிக்குப் படிக்க அனுப்பும் தங்கள் பெண் பிள்ளைகள், கல்லூரில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கின்றனர் என நம்பியிருக்கும் பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அதிர்ச்சிகரமான செய்தி இது!

தற்போது வெளியாகி இருக்கும் இத்தகவல் கேரளா முழுவதும் மிகுந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்பவரா? இணையம் உபயோகிப்பவரா? கவனமாக இருங்கள்! அதனை நல்லதுக்கும் பயன்படுத்தலாம்; கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தலாம்!

கருத்துக்கள் (9)Add Comment
0
...
எழுதியவர்: ஜோசப், June 28, 2009
கேரளத்தில் லெஸ்பியன் யாரோ கட்டிக்கிட்டாங்களாமே? அல்லாத்துக்கும் கேரளா எப்பவுமே முன்னணியில் தான்னு சொல்லுங்க
0
...
எழுதியவர்: mohammeds, July 09, 2009
kerala insha allah pray with allah subuhawuttalah,, then only we secure our peopeles from these kaafir
0
...
எழுதியவர்: saleem, July 09, 2009
yes mohammed you are wright.......
0
...
எழுதியவர்: ayub, July 09, 2009
kaliyugam
0
...
எழுதியவர்: Thanalekshmi, October 14, 2009
Manaushangalada neenga
0
...
எழுதியவர்: Abdullah, December 23, 2009
எப்படியும் வாழலாம் என்ற வக்கிரபுத்தி படைத்த மனிதர்கள் இருக்கும்பொழுது இப்படித்தான் நடப்பார்கள். படித்த மேதாவிகள்தான் இந்த மனிதகுலத்திற்கு கேடு செய்யும் காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். தூங்கும் அரசாங்கம் விழித்துக்கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் இளம் ஆண்களையும் பெண்களையும் காக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் ஏன் பிறந்தோம், வாழ்வின் முடிவு என்ன, இறந்த பிறகு நம் நிலை என்ன என்ற சிந்தனை உண்டாகும்பொழுது – உண்மையான இறைச்சிந்தனை தோன்றும் - நம்மை - இந்த உலகை படைத்த இறைவன் கண்காணித்துக்கொண்டு இருக்கிறான் என்ற நினைப்பு எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தால் : எப்படிப்பட்ட இழி செயல் செய்வதற்கும் மனிதர்கள் பயப்படுவார்கள் மனிதர்களுக்கு கேடுதரும் காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். இயற்கை மார்க்கம் இஸ்லாத்தில் மட்டும்தான் இப்படிப்பட்ட கேடுகள் அனைத்தையும் விட்டு விலகி தூய்மையாக வாழ்வதற்கு வழி காட்டுகிறது. எந்த சித்தாந்தத்தில தேடினாலும் மனிதன் பயம் இல்லாமல் வாழவே வழிகாட்டும். – அப்துல்லாஹ்.
0
...
எழுதியவர்: virumandi, August 16, 2010
KERALAUKKU IDHALLAAM SAGAJAMAPPAA.
0
...
எழுதியவர்: saha, October 04, 2010
kaalam kali kaalam, kalviyithaan muthalidam enral kattililum muthalidama.... seruppil adiththu payan illai uruppukalai vetti vidungal.....
0
...
எழுதியவர்: N.A. Mohamed Sadiq, December 27, 2010
திரு அப்துல்லா எழுதிய கருத்ட்தை நானும் வழிமொழிகிரேன் முஹம்மது ஸாதிக் பாலை அத்திக்கடை

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்