மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஷீஷா என்றும் ஹப்ளி பப்ளி என்றும் அழைக்கப்படும் குடுவைப் புகைத்தல் சிகரெட்டைப் போன்றே கெடுதல்கள் நிறைந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்புகைப் பழக்கம் சாதாரணமாக சிகரெட் புகைக்கத் தயங்குபவர்கள் தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதாகும்.
ஷீஷா எனப்படும் குடுவைப் புகைத்தலில் புகையிலையுடன் பல்வேறு வகையான மூலிகைகளைக் கலந்தும் சில பழ வாசனைகளைக் கலந்தும் குடுவையில் இட்டு புகைக்கும் போது, புகையிலை முழுதாக ஆக்சிஜனேற்றம் அடையாததால் பெருமளவு கார்பன் மோனாக்சைடு உண்டாகிறது.
இவ்வாயு மிகவும் கெடுதல் நிறைந்ததாகும். இதைத் தொடர்ந்து சுவாசித்து வந்தால் மூளைச் சிதைவு ஏற்படும். மத்திய கிழக்கில் பணிபுரியும் இந்தியர்கள் பலரும் இப்புகைப்பழக்கம் கெடுதல் இல்லாதது எனத் தவறான புரிதல் கொண்டு, நண்பர்களுடன் கூட்டாக இதைப் புகைக்கின்றனர்.
அதோடு, இதனைப் புகைக்கப் பயன்படுத்தும் குழாய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் தொற்று நோய் பரவக் காரணியாய் இருப்பதும் கவலை தரும் இன்னொரு தகவல்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





எனது டிப்ஸ்கலை கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பார்த்து பையனடைவீர் www.boopathysiddha.blogspot.com