சோதனை முயற்சியில் கண்டறியப்பட்ட எயிட்ஸ் உயிர் கொல்லி நோய்க்கான புதிய மருந்து, நோயின் வீரியத்தைக் குறைப்பதில் வெற்றிகரமாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் சோதனை செய்யப்பட்டு தோல்வியடைந்த அல்வாக் கானரி போக்ஸ், எய்ட்ஸ் வாக்ஸ் ஆகிய மருந்துகளிலிருந்து இப்புதிய மருந்து புது உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எயிட்ஸ் நோய்க்கான கண்டுபிடிப்பில் அமெரிக்க இராணுவ விஞ்ஞானிகளும் தாய்லாந்து உடல் ஆரோக்கிய அமைச்சகமும் இணைந்து பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட இப்புதிய மருந்தை, தாய்லாந்தில் 16,000 க்கும் அதிகமானவர்களுக்குக் கொடுத்து சோதனை நடத்தியதில், எயிட்ஸ் வைரஸான எச்.ஐ.வி பகர்வது 31.2 சதவீதம் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
வியாபாரத்திற்காக தயாரிக்கப்படும் மருந்திற்கான முதல் படியே இப்பரிசோதனை என தாய்லாந்து உடல் ஆரோக்கிய அமைச்சர் விதயா கியூபாரடே கூறினார். புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த எயிட்ஸ் மருந்து ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய தோல்வியுற்ற இரு மருந்துகளின் கூட்டு கலவை, எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது இதுவரை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எயிட்ஸுக்கான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை உலக ஆரோக்கிய அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. எச்.ஐ.வி வைரஸைக் கட்டுப்படுத்த இப்புதிய மருந்தினால் முடியும் என்பது மிக முக்கியமான விஞ்ஞான சாதனை என ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள் புகழாரம் சூட்டின.
புதிய மருந்தை 18 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களில் சோதனை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இச்சோதனையில் மருந்து கொடுக்கப்பட்டவர்களில் நோயின் பாதிப்பு 31.2 சதவீதம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகமான ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் மூலம் மட்டுமே புதிய மருந்தை உபயோகிக்க முடியும் என அமெரிக்காவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்பெக்ஷஸ் டிஸீஸஸ் டைரக்டர் டாக்டர். அந்தோணி போஸி அறிவித்துள்ளார்.

எழுதியவர்: younus, December 31, 2009
எழுதியவர்: மரு. லெ. பூபதி , October 08, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




