இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி - டில்லியில் ஒருவர் கைது

E-mail அச்செடுக்க

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக கூறி அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின்  தகவலின் பேரில் ஜெயின் என்பவர் இன்று அமுலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 

அவருக்கு சொந்தமான 9 வீடுகளும் சோதனை செய்யப்பட்டு, கணக்கில் வராத 60 லட்ச ரூபாய் ரொக்கமும், வெளிநாட்டு கரன்ஸிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர், தனது சகோதரர்கள், பீமால், சத்பால் ஆகியோருடன் இனைந்து சர்வதே அளவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இவர்களுக்கு, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், பொலிவியா, காங்கோ, இத்தாலி ஆகிய நாடுகளில் முகவர்கள் இருப்பதாகவும், சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா வர்த்தகம் புரிந்துள்ளதாகவும் முதற் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

அதேபோல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்களுக்கு சட்டதிற்கு புறம்பாக பணம் பட்டுவாடா செய்ததாகவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. அதே போல் சர்வதேச தீவிரவாதி, தாவூத் இப்ராஅஹிமுடனும் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்