நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளின் சிந்தனையாக உலகப் புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றை தமிழாக்கித் தந்துள்ளோம்.
உங்கள் குழந்தைகள் - உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள் உங்கள் வாழ்க்கைக்கான
ஏக்கத்தின் புதல்வர்களும் புதல்விகளும்
அவர்கள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு
வந்துள்ளார்களே தவிர
உங்களில் இருந்து அல்ல
அவர்கள் உங்களுடனேயே இருந்தாலும்
அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல.
அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர
உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.
ஏனெனில் அவர்கள் அவர்களுக்கான
சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் தேகங்களுக்கு ஒரு இல்லத்தை
நீங்கள் வழங்கி இருக்கலாம் ;
ஆன்மாக்களுக்கு அல்ல.
ஏனெனில் அவர்களின் ஆன்மா கற்பனையிலும்
உங்களால் பிரவேசிக்க முடியாத
நாளை எனும் வீட்டினில் ஜொலிக்கிறது.
நீங்கள் அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;
ஆனால் உங்களை போன்று
அவர்களை ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.
ஏனெனில் வாழ்க்கை என்பது
பின்னோக்கி செல்வதுமல்ல;
நேற்றைய தினத்தோடு தேங்கிநின்று விடுவதுமல்ல
- கலீல் கிப்ரான்
- கலீல் கிப்ரான்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




