தலாய் லாமாவின் அருணாசல வருகையை ஒட்டி நேற்றைய தினம் சீன அரசாங்க செய்தி தாளான பீப்பிள்ஸ் டெய்லியில் இந்தியா தன் எல்லை தகராறை தீர்த்து கொள்ள தலாய்லாமாவை துருப்பு சீட்டாக பயன்படுத்துவதாகவும், இது மாதிரி சீனாவை தூண்டி விடும் யுக்திகள் மூலம் 1962 – ல் பெற்ற பாடத்தை மறக்க வேண்டாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியுறவு துறை துணை அமைச்சர் சசி தரூர் 1962 ஓர் வரலாறு என்றும் வரலாறு அவ்வளவு எளிதாக மீண்டும் திரும்புவதில்லை என்றும் கூறினார். மேலும் சசி தரூர் கூறும் போது 1962ம் வருடத்தை விட இந்தியா வலுவான நிலையில் உள்ளதாகவும் இது போன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை தவிர்த்து கொள்ளுமாறும் எச்சரித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




