ஜார்கண்ட் மாநில முதல்வராக சிபுசோரன் மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்கண்ட் ஆளுனர் சங்கர நாராயணன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் பாஜகவை சேர்ந்த ரகுபர் தாஸ் , அனைத்து ஜார்கண்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த சுதேஷ் மேஹ்டோவும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
44 எம்.எல். ஏ க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள சிபுசோரன் தலைமையிலான அரசு ஜனவரி 8 அன்று பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுனர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





iraivan thaan pathuhakkanum..