இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அய்யன் திருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு!

E-mail அச்செடுக்க
2010ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளூவர் உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் பற்றிய அறிவிப்பை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசுச் செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கிப் போற்றிடும் சீரிய திட்டம் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி,

2010ஆம் ஆண்டிற்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” முனைவர்
திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வழங்கிட தமிழக அரசு முடிவு செடீநுதுள்ளது.

2009ஆம் ஆண்டிற்கு,
சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” திரு.நக்கீரன் கோபால் அவர்களுக்கும்;

“அறிஞர் அண்ணா விருது” முனைவர் திரு. ஒளவை நடராசன் அவர்களுக்கும்;

“அம்பேத்கர் விருது” திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுக்கும்;

“பெருந்தலைவர் காமராசர் விருது” விருதுநகர் திரு.ஆர்.சொக்கர் (சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்) அவர்களுக்கும்;
“பாரதியார் விருது” திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்களுக்கும்;

“தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது” திரு.அண்ணாமலை என்கிற இமயம் அவர்களுக்கும்;

“பாவேந்தர் பாரதிதாசன் விருது” கவிஞர் திரு.தமிடிநதாசன் அவர்களுக்கும்;

“முத்தமிடிநக் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கும்

வழங்கிட தமிழக அரசு இன்று (4.1.2010) முடிவு செய்து அறிவித்துள்ளது.

விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி, தங்கப்பதக்கமும் அணிவிக்கப்படும். 15.1.2010 திருவள்ளுவர் தினத்தன்று, மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிப்பார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்