இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

எண்ணூரில் 800கோடி ருபாய் செலவில் ஜப்பானின் தோஷிபா நிறுவனம்

E-mail அச்செடுக்க
சென்னை என்னூரில் 800கோடி ருபாய் செலவில்  ஜப்பானின் தோஷிபா நிறுவனம் ஜெனரேட்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில் தமிழ் நாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு  செய்வதற்கு உகந்த மாநிலமாக உள்ளது என்றும், தமிழ் நாட்டின் தொழில் கொள்கைகள் அனைத்தும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருப்பது தான் முக்கிய காரணம் என்றார்.

இந்த தோஷிபா நிறுவனத்தினால் சுமார் 500 நபர்களுக்கு  வேலைகிடைக்க வாய்ப்புள்ளது  என்றும், எண்ணூரை சுற்றியுள்ள பகுதிகளும் இதனால் பயன்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்