மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் ரூ.7.7 கோடி ரொக்கம் உள்பட ரூ.500 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர்.மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், தம்பதியுமான அரவிந்த் ஜோஷி, டினு ஜோஷி உள்ளிட்டோருக்கு தொடர்புடைய 13 இடங்களில் கடந்த 4 நாள்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதேபோல, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் விவசாயத் துறை செயலர் பி.எல்.அகர்வால் மற்றும் சிலருக்குத் தொடர்புடைய 7 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனைகளின் போது கணக்கில் வராத ரூ.7.7 கோடி ரொக்கம் உள்பட ரூ.500 கோடி மதிப்புள்ள நகை, ஆவணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(07/02/2010) அன்று தகவல் வெளியிட்டுள்ளன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




