இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

E-mail அச்செடுக்க
போலியோ நோய் அதிகம் பரவக்கூடிய காலத்தில் வருடத்திற்கு 2 முறை தடுப்பு மருந்து வழங்க உலகம் முழுவதும் முடிவு செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் இந்த போலியோ சொட்டுமருந்து சிறப்பாக போடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இந்தியாவில் போலியோ சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் போலியோ இல்லாத நிலைஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இவ்வருடத்திற்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நேற்று நடைபெற்றது.

இதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள்,ரெயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், கடற்கரை உள்பட பொதுமக்கள் கூடுமிடங்கள்,அகதிகள் முகாம் உள்பட ஏராளமான இடங்களில் போலியோ சொட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகாமுக்கு ஆர்வத்துடன் கொண்டுவந்து சொட்டுமருந்து போட்டனர். மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துபோடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாமாக காணப்பட்டது.

வெளி மாநிலத்தில் இருந்து கட்டுமான தொழில் உள்பட பல கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து போடப்பட்டது. அகதி முகாம்களில் உள்ள 30 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 70 லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

சென்னையில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 224 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்துபோடப்பட்டுள்ளது. அமைந்தகரையில் கலெக்டர் காலனியில் மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.

மேயர் கூறுகையில், சொட்டுமருந்து முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள்,தன்னார்வலர்கள் உள்பட மொத்தம் ஐயாயிரம் பேர் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லகானி,துணைஆணையர் ஜோதி நிர்மலா, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழு தலைவர் சுரேஷ்பாபு, சுகாதார அலுவலர் டாக்டர் குகாகனந்தம், கூடுதல் சுகாதார அலுவலர் தங்கராசு, மாவட்ட குடும்ப நல அதிகாரி விஜயா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்