இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி - மம்தா

E-mail அச்செடுக்க
"நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி" என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும்,​​ மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி சூசகமாகக் ​குறிப்பிட்டுள்ளார்.

12 புதிய ரயில்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி உத்தரபிரதேசம், கான்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07/02/2010) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயிலைத் துவக்கி வைத்து, மம்தா பானர்ஜி பேசும் போது, "உத்தரப் பிரதேசம் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் ஆகும். ஜவாஹர்லால் நேரு,​​ லால் பகதூர் சாஸ்திரி,​​ இந்திரா காந்தி,​​ ராஜீவ் காந்தி உள்ளிட்ட பிரதமர்களை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது.​ சோனியா காந்தியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரே.​ உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைவரே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவராக இருப்பார்" என ராகுல் காந்தியைச் சூசகமாக குறிப்பிட்டு பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பேயும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்