ரயில்களிலுள்ள குளிர்சாதன கோச்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிற உறையுடன் கூடிய தலையணை, படுக்கை விரிப்பு, போர்த்திக் கொள்ள கம்பளப் போர்வை ஆகியவை முறையாக சலவை செய்யப்படுவதில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.டிக்கெட் முன்பதிவு கட்டணத்துடன் படுக்கை விரிப்புக்கான கட்டணமும் சேர்த்தே பயணிகளிடம் வசூல் செய்யப்படுகிறது. தலையணை உறைகள், விரிப்புகள், கம்பளப் போர்வைகள் தயாரித்து பயணிகளுக்கு விநியோகம் செய்ய தனியாருடன் ரயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த விரிப்புகள், தலையணை உறைகள் முறையாக சலவை செய்யப்படுவதில்லை என பயணிகளிடையே புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் பயணிகளுக்கு சலவை செய்த விரிப்புகளை இஸ்திரி செய்த மடிப்புக் கலையாமல் வழங்கப்படுவதாக கூறும் பயணிகள், மீண்டும் இதே ரயிலில் சென்னை செல்லும்போது முறையாக சலவை செய்யாத பயன்படுத்தப்பட்ட விரிப்புகள் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் முறையாக விரிப்புகளை வழங்குகிறார்களா?, துணிகள் முறையாக சலவை செய்யப்படுகின்றனவா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. புகார் வந்தால் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்துவதாக பயணிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர். இப்போது குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளில் பெரும்பாலோர் வீட்டில் இருந்தே தலையணை மற்றும் விரிப்புகளை உடன் எடுத்து வருகின்றனர்.
குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளைத் தவிர இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில்கூட பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் ரூ.20 கட்டணத்தில் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டால் அது தவறான நடைமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




