சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயை, மத்திய வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் மும்பையில் நேற்று(08/02/2010) சந்தித்தார். இச்சந்திப்பை அரசியலாக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஐ.பி.எல். அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெறுவதற்கு பால்தாக்கரே ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அதற்கு விளக்கம் அளித்து, போட்டியைச் சுமுகமாக நடத்துவதற்கு தாக்கரேவின் ஆதரவு பெற பவார், பால் தாக்கரேயைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாக்கரே- பவார் சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவசேனாவை ராகுல் காந்தி தாக்கிப் பேசிவரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணியிலுள்ள பவார் தாக்கரேயைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:
"ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை எந்த சர்ச்சையும் இன்றி நடத்த வேண்டும் என்பதற்காகவே தாக்கரேவை பவார் சந்தித்துள்ளார். ஐ.பி.எல். அணியில் ஆஸி வீரர்கள் இடம் பெறுவதற்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கவே இச்சந்திப்பு நடந்துள்ளது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




