"எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம், அதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக வேண்டும்" என்று திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி கூறியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவான நேற்று(08/02/2010) அன்று விழாவில் கல்ந்து கொண்டு, திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி அவர்கள் பேசும் போது, "தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல. எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம். அதற்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும். அப்போதுதான் நாடு வளம் பெறும்" என்று பேசினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




