இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மக்களவை உறுப்பினர் வருகையை உறுதிபடுத்த சட்டம்!

E-mail அச்செடுக்க

"மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் தங்களது பொறுப்பையும்,​​ கடமையையும் உணர்ந்து அவைக்கு வருகை தருவதைக் கட்டாயமாக்க தேவையெனில் சட்டம் கொண்டு வரப்படும்" என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார்.

சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.​ பல்கலைக்கழகத்தில் நேற்று (08/02/2010) நடைபெற்ற 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசும் போது, "எஸ்.ஆர்.எம்.​ பல்கலைக்கழகத்தில் பல்வேறு உயர் தொழில்கல்வி பயின்று,​​ ​போட்டிகளையும்,​​ சவால்களையும் எதிர்கொள்ளும் திறன்களை மாணவ,​​ ​மாணவிகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். பொறியாளர்களாகவும், ​​ மருத்துவர்களாகவும்,​​ விஞ்ஞானிகளாகவும் திகழப்போகும் மாணவ சமுதாயம்,​​ நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மனிதாபிமானத்தையும்,​​ சேவையையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

நவீன இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளாக மாணவர்களை உருவாக்கும் மகத்தான பொறுப்பு,​​ நவீன கோயில்களாகத் திகழும் கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

ஒரு வருடத் தேவையெனில் ஏதேனும் தானியங்களையும்,​​ 10 வருடத் தேவையெனில் ஏதேனும் மரங்களையும் பயிரிடுங்கள்.​ நூறு வருடமெனில் மனிதர்களை உருவாக்குங்கள் என்பது சீனப் பழமொழி.

எந்த ஒரு நாடும் ​ அதன் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு ​அனைத்து வாய்ப்புகளையும் வழங்கவில்லை என்றால் அந்த நாடு முன்னேறவே முடியாது.​ எனவே இளைஞர்களான நீங்கள் பெண்களுக்கு வாய்ப்பளிக்க முன்வருவதுடன்,​​ வரதட்சிணை,பால்வேறுபாடு,​​ குடும்ப வன்முறை,​​ கருக்கலைப்பு ஆகிய பெண்களுக்கு எதிரான சமூகத் தீமைகளை ஒழிக்க முன்வரவேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருந்து வரும் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள்,​​ ஜாதி,சமய ஆதிக்கவெறியை ஒழித்து நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல படித்தவர்களான நீங்கள் உதவ வேண்டும்" என்று பேசினார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்