மிக பிரபல சாமியார் நித்யானந்தா நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக அவரது ஆசிரம செய்திகள் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் வந்தார் நித்யானந்தா.இவரது போதனைகள் சில வார இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இந்து மத நம்பிக்கையாலர்களிடம் மிகையும் மதிப்புக்குரியராக விளங்கப்படும் இவர் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் மிகுந்த மன வேதனையும் வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது.
விடியோவில் வெளிவந்த காட்சிகளில் நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார்.
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் படங்கள் கிழக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பிரபல சாமியார் நித்யானந்தா நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் சாமியார் ஏற்படுத்தியுள்ள ஆசிரம கட்டமைப்பின் தலைமையகம் பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
நித்யானந்த சுவாமி தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழகத்தின் திருவண்ணாமலைதான் அவர் பிறந்த ஊர். பிறந்த பத்தாவது நாளில் அவருக்கு ஜாதகம் கணிக்க அழைக்கப்பட்ட ஜோதிடர், குழந்தையின் கிரகசாரங்களை பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாக திகழ்வார் என்று கூறினாராம். 1978ம் ஆண்டு பிறந்த நித்யானந்தாவின் ஒரிஜினல் பெயர் ராஜசேகரன். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீக குருவாக கொண்டு வளர்ந்த ராஜசேகரன் 12 வயதிலேயே குண்டலினி சக்தியை எழுப்பும் ஆற்றல் பெற்றதாக அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. இமயமலையில் உள்ள ஒரு பெரிய சாமியார் அவருக்கு பரமஹம்ச நித்யானந்தா என பெயரிட்டதாக அவரது ஆசிரம செய்திகள் கூறுகிறது.
பெயர் மாற்றத்துக்கு பின்னர் ஈரோட்டில் காவிரி நதிக்கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்த அவர், அங்கிருந்து பெங்களூர் சென்று ஆசிரமம் நிறுவினார். பிரம்மச்சரிய விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்து வரும் வந்தார் நித்யானந்தா.இவரது போதனைகள் சில வார இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இந்து மத நம்பிக்கையாலர்களிடம் மிகையும் மதிப்புக்குரியராக விளங்கப்படும் இவர் நடிகையுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் மிகுந்த மன வேதனையும் வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது.
விடியோவில் வெளிவந்த காட்சிகளில் நடிகையும் சாமியாரும் படுசகஜமாக பேசிக் கொண்டு உல்லாசத்தில் ஈடுபடுவது நீண்டகால பழக்கம் என்று தெரிகிறது. ஒருநாள் புடவையில் வரும் நடிகை அடுத்தநாள் சுடிதாரில் வருகிறார். கட்டிலில் சாமியாரும் அவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். நடிகையிடம் கேட்டு ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிடும் சாமியார் பின்னர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார். உற்சாகமாக ஏதோ பேசிக் கொண்டு நடிகையை தழுவிக் கொள்கிறார்.
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் படங்கள் கிழக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கருத்துக்கள் (2)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|





இவனைப் போன்றவர்களின் ஆண் குறியை அறுத்து பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப் பட வேண்டும். இந்து மக்களின் நம்பிக்கையை கிள்ளுக் கீரையாக்கி விட்ட இவன், கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியன். இந்தியாவில் தண்டனைகள் கடுமையானால் தான் போலிச் சாமியார்கள் குறைவார்கள்.
வேல் முருகன், சீர்காழி