ஹைதராபாதில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். மேலும் தரையிலிருந்த 4 பேர் காயமடைந்தனர்.
இந்திய விமானக் கண்காட்சியில் சாகர் பவன் அணியினரின் கிரண் எம்கே-2 என்ற விமானம் சாகசக் கண்காட்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரு கட்டடம் சேதமடைந்ததாகவும், அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணத்தை அறிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
ஹைதராபாதில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் கடற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானி உயிரிழந்தார். மேலும் தரையிலிருந்த 4 பேர் காயமடைந்தனர்.
இந்திய விமானக் கண்காட்சியில் சாகர் பவன் அணியினரின் கிரண் எம்கே-2 என்ற விமானம் சாகசக் கண்காட்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஒரு கட்டடம் சேதமடைந்ததாகவும், அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணத்தை அறிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




