கிளுகிளுப்பைத் தூண்டுவதால் “வயாகரா” மாத்திரைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. உலகலாவிய தேவையைப்யனபடுத்தி போலி வயாகரா மாத்திரைகளும் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. இன்னிலையில் வயாகராவில் பறவைக் கழிவுகளும் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நியூசிலாந்திலிருந்து விற்கப்படும் மாத்திரைகளில் பெருமளவில் பறவைக் கழிவுகள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வவ்வால் மற்றும் பறவைகளின் எச்சங்கள், உரோமங்கள், நுண்ணிய பூச்சிகள், மரக்கரி போன்றவையும் கலந்து அவை தயாரிக்கப்படுவதாக அந்நாட்டு விஞ்ஞானி தல்லாஸ் மில்டன் ஹால் தெரிவித்துள்ளார்.
இவைதவிர நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்கள் மற்றும் பாதரசம் போன்றவையும் வயாகராவில் கலக்கப்படுவதாக சுற்றுச் சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
எனவே,ஆன்லைனில் இவற்றை மிகவும் கவனமாக வாங்க வேண்டும் என்று ஒட்டாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கிளார் ஸ்ட்ராசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




