ஷார்ஜா: இன்று புதன்கிழமையன்று ஷார்ஜா இண்டஸ்டிரியல் ஏரியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தில் இரண்டு வேர் அவுஸ்கள் முற்றிலும் தீக்கிரையானது மற்றும் தொழிலாளர்கள் பலர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.
இன்று காலை 11 மணியளவில் மொவைலா கேம்ப் அருகே உள்ள 13 வது இண்டஸ்டிரியல் ஏரியா பகுதியில் திடீரென தீப்பிடித்தது என ஷார்ஜா சிவில் பாதுகாப்பு துறை நிர்வாக இயக்குனர் கர்னல் வலீத் அல் செர்கல் தெரிவித்தார் மேலும் தீக்கிரையான இரண்டு வேர் அவுஸ்களிலும் தீப்பற்றக்கூடிய பெயிண்ட் ஸ்பான்ச் போன்ற பொருட்களும் மரத்தினாலான கார்ட்போர்ட் போன்ற பொருட்களும் இருந்ததாக கூறினார் இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது மேலும் சேதமடைந்த மற்றும் தீக்கிரையான பொருட்களின் மதிப்பு பெரிய அளவில் இருக்கும் ஆனால் இன்னும் அவை கணக்கிடபடவில்லை என்றும் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




