இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பாமக, கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நிபந்தனை ஜாமீன்!

E-mail அச்செடுக்க

சென்னை: மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் ஆகியவை தாக்கப்பட்ட வழக்கில் பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உ.ரா.வரதராஜன் மரணம் தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தைத் தாக்கினர். இதன் எதிரொலியாக, தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது. இதுதொடர்பாக, பா.ம.க.வைச் சேர்ந்த 14 பேரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னையிலுள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அத்துடன் சென்னை மாநகராட்சி பா.ம.க. கவுன்சிலர் பிரகாஷ் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு , "மார்க்சிஸ்ட் கட்சியினர் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள முதலாவது நீதித்துறை நடுவர் முன்னிலையில் தினமும் கையெழுத்திட வேண்டும். பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் வேலூரில் தங்கியிருந்து அங்குள்ள நீதித்துறை நடுவர் முன்னிலையில் மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும். மேலும் ரூ.5 ஆயிரம் மற்றும் இரு நபருக்கான உறுதிப் பத்திரத்தை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என நீதிபதி உத்தரவிட்டார்.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்