இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

போலிச்சாமியார் நித்யானந்தா சீடர் முன் ஜாமீன் கோரி மனு!

E-mail அச்செடுக்க

சென்னை: நடிகையுடன் உல்லாசமாக இருந்த போலிச் சாமியார் நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்ற ஸ்ரீ நித்யா சரவணானந்தா முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், "நான் கடந்த 1983-ம் ஆண்டு முதல் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வருகிறேன். சாலை விபத்து காரணமாக 14 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்தேன். எனது நண்பரின் அறிவுறுத்தலால், சுவாமி நித்யானந்தாவை சந்தித்து ஆசி பெற்றேன். அவரிடம் ஆசி பெற்ற பிறகு நான் பூரண குணமடைந்தேன். அதன்பிறகு, அவரிடம் சீடராக சேர்ந்து எனது பெயரையும் ஸ்ரீ நித்யா சரவணானந்தா என்று மாற்றிக் கொண்டேன். என்னிடம் வரும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகளையும், ஆன்மிக அறிவுரைகளையும் சிகிச்சையாக வழங்கி வந்தேன்.

திரைப்பட நடிகை ஒருவருடன் நித்யானந்தா இருக்கும் படக்காட்சிகள், தனியார் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியாயின. இதையடுத்து, பள்ளிப்பாளையம் காவல்துறையினர் என் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேற்கண்ட சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்த இம்மனு மீதான விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்