இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

முஸ்லிம்,சிங்கள மாணவர்களிடையே மோதல்!

E-mail அச்செடுக்க
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்லூரியில் படித்துவரும் முதலாம் வருட சிங்கள மாணவர்களுக்கும் இடையில் தங்கும் விடுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வாய்ச்சண்டை மோதலாக வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் குழு உள்ளதால் மீண்டும் இந்த இரு பிரிவினரிடையே மோதல்கள் வெடிக்ககூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சம்பவ இடத்தில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து அங்கு நிலமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்