வெள்ளிக் கிழமை தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகளில் கொல்கத்தா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல். மூன்றாம் ஆண்டு போட்டிகள் 12-03-2010 முதல் 25-04-2010 வரை நடைபெறுகிறது. 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஐதராபாத் டெக்கான் சார்ஜஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய டெக்கான் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




