பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாம் மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் செய்திக்குப் பேட்டியளித்த பேராசிரியர் பெரியார்தாசன் தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டிருப்பதாக அறிவித்தார்.
மேலும் கூறுகையில், உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மதம் இஸ்லாம் மட்டுமே என்றார். பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குரான் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே பெருமகனார் முகமது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.
கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்த பெரியார்தாசன், கருத்தம்மா உள்ளிட்ட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். பெண்சிசுக்கொலை குறித்த இப்படம் தேசிய விருது பெற்றது.
பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுமத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வந்த நான், மதங்கள் மட்டுமே இவ்வுலகிலிருந்து மறு உலகம் செல்வதற்கான வழி என்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன் என்றார்.
முஸ்லிம் மதத்தில் இணைந்துள்ள பேரா.பெரியார்தாசன் புனித நகரமான மக்காவுக்கு உம்ரா எனும் புனிதப்பயணம் மேற்கொள்ள இன்று திட்டமிட்டுள்ளார்

எழுதியவர்: பனங்காட்டூர் மு.அப்துல் ஹலீம் ஜித்தா சவுதி அரேபியா , March 13, 2010
இஸ்லாம் ஒரு திறந்த புத்தகம், இறைவனின் உண்மை மார்க்கம். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் புனித நீரோடை
எழுதியவர்: AMEEN, Pondicherry, March 13, 2010
எழுதியவர்: AMEEN, Pondicherry, March 13, 2010
எழுதியவர்: s.m f .basheer ahamed,jeddah, March 13, 2010
எல்லா புகழும் இறைவனுக்கே
எழுதியவர்: halleem (noudha), March 14, 2010
மாஷா அல்லாஹ்
There is no god expect Allah
எழுதியவர்: vetri london, March 14, 2010
best wshes
எழுதியவர்: சாதிக் அலி, March 14, 2010
எழுதியவர்: S. MOHAMED THAMEEM, March 14, 2010
எழுதியவர்: Badhi, March 14, 2010
Mr.Abdullah you are lucky and God shows the right path to you..
There are so many Muslims they are confusing muslims and trying to divide them for thier benefits from political parities...
I was so upset with those people and this news gave me a boost that God will bring people into Islam if the muslims are doing and going against God and his messenger..
எழுதியவர்: Badhi, March 14, 2010
Let 1000's of people can confuse muslims like (TNTJ), God is great to light the right peple..
எழுதியவர்: அதிரை அஹ்மது, March 14, 2010
எழுதியவர்: ahamed, March 14, 2010
Alhamdulillah..
Great news..
May Allah show guide us all in his religion
எழுதியவர்: Mohamed, March 14, 2010
Please go through Quran & come to a conclusion whether his decision is right or wrong. Don't intentionally blame isalm by your own words. Everyday lots of peoples embracing Islam. Not to have 4 wives & 1 doz kids. Please mind your words. Could you able to stop those from embracing Islam. u can't. Because u don't have any valid evidence to prove christianity is the right path.
எழுதியவர்: Martin, March 15, 2010
Is it true that most muslims do have more than 2 kids and average of muslism family is more than 7 or 8?
Is it you read that 70 year old marrying 17 yr girls, look into these news in GCC, you find such story daily!
I am not against Islam, but it's preaching of brotherhood but in reality killing many people by bombing, where is equity you preach - go to GCC, you will find Whites getting more than 5 times whereas same job held by Asian gets peanuts, where is your Allah to bring justice and remove this discrimination?
Why can't your Allah remove poverty in the world?, Why everyone is not having GMC/BMW? Why everyone in the world is not getting Kabsa (many don't have even handful of rice, but Arabs waste huge amount of food in the dust bin daily?)
Ramadan is meant for fasting, but All food companies sell maximum in that month, is this month of fasting or feasting?
Shiyas & Sunnies kill each other every year!
List is endless...
எழுதியவர்: முகம்மது, March 15, 2010
Whether Dr. Abdullah needs 4 wives, or 1doz kids his personal decision, you don't need to interfere . if you too want to get 2doz kids why should not you try at your wife or cocubine (courtesy bible) ? or are u nine don't have courage to brought up a family with 1 doz kids? And if you do onanism (courtesy bible) with your wife even you won't get a single baby
Every muslim should have courage to run a family with either 1 or 1doz kids, because he/she believes Allah feed not only to human but to every living being.
எழுதியவர்: ஷமீம், March 15, 2010
நீங்கள் கொள்கையையும் அதனைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் மக்களின் செயல்பாடுகளையும் ஒன்றாக இணைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையேல்,
"இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" குறித்தும் இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் கூறும் கடவுள் கொள்கை குறித்தும் அப்படியே "கடவுளே இல்லை" எனக் கூறும் நாத்திக கொள்கை குறித்தும் நாம் வெளிப்படையான ஒரு கருத்துப்பரிமாற்றம் செய்வோமா? ஒருதலைபட்சமாக, முன்முடிவுகள் இன்றி உண்மை எவ்வாறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் கருத்துப் பரிமாற தயார் என்றால் கூறுங்கள். நாம் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் நடத்துவோம்.
அதை விடுத்து,
நான்கு மனைவியுடன் ஒரே இரவில் ஒன்றாக தூங்குதல், ஒரு டசன் குழந்தைகள், ஷியா-சுன்னி பிரச்சனை, ஜி.எம்.ஸி - கப்ஸா அனைவருக்கும் கிடைக்காமை, அரபிகள் கொட்டும் உணவு, ரமளானில் செலவாகும் உணவு ஆகியவை குறித்துப் பேச விரும்புகிறீர்கள் எனில் அதையும் பேசுவோம்.
ஆனால், அவற்றிற்கும் இஸ்லாமிய கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை, சிலர் செய்யும் தவறான செயல்கள் தான் இஸ்லாத்தின் கொள்கை என நீங்கள் கூற வருகிறீர்கள் எனில், அதனைக் குறித்தும் பேசுவோம்.
எதுவாக இருந்தாலும் வெறுமனே சேறு வாரி வீசி செல்லல் வேண்டாம்.
குறைந்தபட்சம், இஸ்லாத்தைக் குறித்து நீங்கள் என்ன விளங்கியுள்ளீர்கள் என்பதையாவது நீங்கள் கூறினால், அவ்வாறு தான் இஸ்லாத்தில் உள்ளதா? என்று நாம் ஆராய்வோம்.
என் மெயில் முகவரி: எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் '> எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
வெளிப்படையாக கருத்துப்பரிமாற விரும்புகின்றீர்கள் எனில் தொடர்பு கொள்ளுங்கள். இதற்கு மேலும் நாலு பொண்டாட்டி, 12 புள்ளைகள், குண்டுவெடிப்பு என்று தான் நீங்கள் பேசிக்கொண்டிருப்பீர்கள் எனில், உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத ஒரு மனநோயாளி என்ற அளவிலேயே உங்கள் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டிவரும்.
"இஸ்லாம் வாளால் பரவிய மார்க்கம்" என்று கோயபல்ஸ் சுத்தும் பொய்யர்களுக்குப் பெரியார்தாசன்கள் பட்டைநாமம் போடுவது பொறுக்கமுடியாது தான்.
ஆகவே, "வயதான காலத்தில் 17 வயது குட்டிக்காக இஸ்லாத்துக்கு மாறுகின்றார்கள்" என்ற கழிசடை பிரச்சாரங்கள் வரத்தான் செய்யும். வயிறு எரிந்தால் தற்போதைக்கு மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து அருந்திக் கொள்ளுங்கள். அந்த கேப்பிலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது!
- ஷமீம்
எழுதியவர்: murali, March 15, 2010
எழுதியவர்: Yevanoo, March 15, 2010
எழுதியவர்: ஷமீம், March 15, 2010
நண்பர் மார்ட்டினுக்கு விடுத்த அதே அழைப்பையே உங்களுக்கும் விடுக்கிறேன்.
இஸ்லாத்தின் அடிப்படையை உணராமல் பாரம்பரியமாக இஸ்லாத்தைப் பெயரோடு வாங்கிப் பிறந்து வாழும் சிலரின் செயல்பாடுகளைப் பார்த்து பொதுவாக எதையும் கூறிச் செல்லக்கூடாது.
இஸ்லாம் மனிதர்களின் வாழ்வை முன்னேற்றுகிறது என்பதைக் கண்திறந்து பார்ப்பவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
இன்று உலகத்திற்குப் பெரும் சவாலாகவும் முன்னேற்றத்தின் எதிரியாகவும் இருப்பது யார் என்பதைக் குறித்தும் விரிவான ஆய்வு செய்வோம். நீங்கள் தயாரா?
- ஷமீம்
எழுதியவர்: sikka, March 15, 2010
thats all.
You are always blaming ISLAM. OK.
I have one question...?
YOUR said muslims are threatening to this world.
ISLAM not allowed to kill innocent peoples, If anyone do that'na. they are not muslims... But americans kill innocent in IRAQ, AFGHAN and more....
bible says, if anyone slap on cheek, show your other side.
but what the Christians doing, without reason they killed lakes in iraq, aafghan...more....
Simply you say that is not a mistake of bible....
Are you making peoples as fools with these kinds of koyapels advertisment.
First read quran and know about ISLAM. then you can ask question...
with idle knowledge dont say anything.....
எழுதியவர்: sikka, March 15, 2010
Posted: 14 Mar 2010 01:55 PM PDT
“நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.
நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.
ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.
நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.
ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டாக்டரின் சொற்பொழிவை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).
-அபூ உமர்
This posting includes an audio/video/photo media file: Download Now
நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் (இன்று டாக்டர். பெரியார்தாசன் அவர்களின் சிறப்புரை) – நாள்:14.03.2010
Posted: 13 Mar 2010 10:56 PM PST
நாள்: ஹிஜ்ரி 28.03.1431 – (14.03.2010)
இடம்: செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா
நேரம்: இன்று (ஞாயிறு) இரவு 8:30 மணி முதல்
தலைப்பு: நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்
டாக்டர். பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்து கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11, 2010) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.
43 ஆண்டுகளாக நாத்திகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இன்றிரவு ஜித்தாவிலுள்ள செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள், அனைத்து தரப்பினரும் தவறாமல் கலந்து பயனடைவதோடு மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி.
எழுதியவர்: Mohamed Ismail. Valuthoor, March 15, 2010
எழுதியவர்: Martin, March 15, 2010
As I said earlier, you can't change your parents hence you can't change your religion. Religion is not girlfriend to change as you wish, you may hate it or love it buy you can escape into another religion. People who change religion are bogus, either they do it for money or just to make sensational news and will get only Temporal peace in his quest to find some solution to the mistry called life.
Ultimate religion in this world is your "Manasaatchi" and Karma. No God, be it Allah, Christ, Buddha, or ubiquitous Hindu gods, can save from your deeds. Don't harm others for your wealth or happyness, don't envy others wealth, then you will end this life peacefully and no need to search for "Sorgam" or "Naragam" after your death. Who cares what will happen after death!
What Periyar Dasan did by converting to Islam is the same as What Bogus Godman Nithyanandaa did by having affair with Rajitha - breaking the faith of people had on them and on their Preaching... Based on their Karma, they are destined to go to "Naragram", whether they escape to Makka or Haridwar!
| < முந்தையது | அடுத்தது > |
|---|





திறந்த மனதுடன் அனைத்து வேத நூல்களையும் ஆய்வு செய்யும் எவரும் உணர்ந்து கொள்ளும் உண்மையையே சகோதரர் பெரியார்தாசனும் உணர்ந்துள்ளார். உண்மையேத் தேடுபவர்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களும் இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதை ஏற்றுக்கொள்ளவே செய்வர்.
சகோதரர் பெரியார்தாசன் பிரச்சாரம் செய்து வந்த பெரியார் அவர்களிலிருந்து அறிஞர் அண்ணா, கருணாநிதி என கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரும்பாலோர், இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை அவர்களின் வாயாலேயே பலமுறை ஒத்துக் கொண்டுள்ளனர்.
பெரியார்தாசன் போன்ற சிந்தனாவாதிகள் இறுதியில் இஸ்லாத்தின் ஒளியில் தங்களை இணைத்துக் கொள்வதன் காரணம் என்ன என்பதையாவது என் இஸ்லாமில்லாத மத சகோதரர்கள் ஆய்வு செய்ய முன்வரவேண்டும்.
தேடுபவர்கள் மட்டுமே அறிந்து கொள்வர்; தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கவும் செய்யும்.
இறைமார்க்கம் இஸ்லாம் கூறும் படைத்தவனை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களுக்கும் அன்போடு அழைப்பு விடுக்கிறேன்.
"லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் படைத்தவனைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது(ஸல்) அவர்கள் படைத்தவனின் தூதராக உள்ளார்கள்".
- ஷமீம்