பென்னாகரத்தில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து நடைபெற்ற வேட்பாளர் மனுதாக்கலில் நேற்று மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் தரப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து தேமுதிக மாற்று வேட்பாளர் செந்தில்குமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ரவி ஆகியோர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இறுதியாக 31 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.மேலும் நான்கு பேர் மனு தள்ளுபடி செய்து இறுதிப் பட்டியலை தொகுதி தேர்தல் அதிகாரி மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.
தி.மு.க. சார்பாக இன்பசேகரன் , அ. தி.மு.க. சார்பாக ஆர்.அன்பழகன், பா.ம.க சார்பாக தமிழ்க்குமரன் மற்றும் தே.மு.தி.க. சார்பாக காவேரி வர்மன் போட்டியிடுகின்றனர். மேலும் 27 சுயேச்ட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




