புதுடெல்லி, ஏப்ரல் 21-ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த பாரதீய ஜனதா முடிவு செய்து இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டத்தை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று மத்திய அரசின் பொருளாதார கொள்ளையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாரதீய ஜனதா தலைவர் ஆனந்த் குமார் பேசும் போது, ”மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் முன்னேற்றம் தடைபட்டு வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையவில்லை. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 21-ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதில் பாரதீய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள்.” என்று கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




