இண்டிகோ விமானத்தில் ஆறு இளைஞர்கள் யு.பி.யில் உள்ள பாட்னாவிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்த போது, விமானம் புறப்பட்டது முதல் விமான பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் விமானியிடமும், சக விமான சிப்பந்திகளிடமும் புகார் தெரிவித்தார். இருப்பினும் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறு செய்து கொண்டே வந்தனர்.
இதையடுத்து, விமானி கட்டுபாட்டு அறைக்கு தெரிவித்த புகாரை அடுத்து விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியதும் அவர்கள் 6 பேரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து விமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், அந்த வாலிபர்கள் 6 பேரையும் விமானநிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டிகோ விமானத்தில் ஆறு இளைஞர்கள் யு.பி.யில் உள்ள பாட்னாவிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்த போது, விமானம் புறப்பட்டது முதல் விமான பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் விமானியிடமும், சக விமான சிப்பந்திகளிடமும் புகார் தெரிவித்தார். இருப்பினும் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தகராறு செய்து கொண்டே வந்தனர்.
இதைதொடர்ந்து, விமானி கட்டுபாட்டு அறைக்கு தெரிவித்த புகாரை அடுத்து விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியதும் அவர்கள் 6 பேரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து விமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், அந்த வாலிபர்கள் 6 பேரையும் விமானநிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




