கைது செய்யப்பட்டு டில்லி சிறையில் இருந்து வரும் சிவ் முராத் திவேதி என்ற போலி சாமியார் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து இந்தியா முழுவதும் செக்ஸ் விபச்சாரம் செய்து வந்ததாக டில்லி போலிஸார் தங்களின் நீதிமன்ற அறிக்கையில் கூறியுள்ளனர்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி,திரு சவாரியா முன்பு ஆஜரான புலனாய்வு அதிகாரிகள், திவேதியின் போலிஸ் காவலை நீட்டிக்கும்படியும் திவேதியை மேலும் விசாரிக்கும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.
அதேபோல், விபச்சார தொழில் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாத்தித்ததாகவும், இதன் மூலம் மும்பை, நொய்டா போன்ற இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்கள், மனைகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹவாலா வர்த்தகம் நடந்தற்கான சான்றுகளும் கிடைத்துத்துள்ளதாக தெரிகிறது.

| < முந்தையது | அடுத்தது > |
|---|





kadumaiyana sattangal amalukku varanum.