தமிழக அமைச்சர்களின் சில பொறுப்புகள் மாற்றப் பட்டு தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் , சட்டத் துறை அமைச்சர் துரை முருகனிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப் பட்டுள்ளது.
சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வசமிருந்த உடல் ஊனமுற்றோர் நலத் துறை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என பெயர் மாற்றப் பட்டு முதல்வர் கருணாநிதியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப் பட்டுள்ளது.
வருவாய் துறை அமைச்சர் பெரியசாமியிடம் இருந்த சிறைத் துறை பொறுப்பும் , மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் இருந்த பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையும் அவர்கிடம் இருந்து பறிக்கப் பட்டு சட்டத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப் பட்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




