பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு காரணமாக மும்பைக்கு மாற்றப் பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த ஐபிஎல் ஆணையர் லலித் மோடி ''நேற்று பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் காரணமாக திட்டமிட்டபடி அரை இறுதிப் போட்டிகளை நடத்த முடியாத நிலையில் குறைந்த பட்ச கால அளவில் இடத்தை மாற்றும் நிலைக்கு தள்ளப் பட்டதாகவும் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 மற்றும் மற்றும் 22 ஆகிய தேதிகளில் அரை இறுதிப் போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளன. மூன்றாவது இடத்துக்கான போட்டியும் இறுதிப் போட்டியும் மும்பையில் தான் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




