இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விரைவில் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக விரைவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் உருவாக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்பெர்ட், கேம்பிரிட்ஜ், மோனாஸ் பேனர்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களன் கிளைகள் இலங்கையில் அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரியளவு அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும், வேறும் பொருளாதார நன்மைகள் கிட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




