2002-ல் அமெரிக்க மையத்தின் மீதான தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், நிழல் உலகத் தாதாவுமான அப்தாப் அகமது அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அப்தாப் அகமது அன்சாரி. இந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, சி.கே. பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அத்துடன், அன்சாரி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக 4 மாதங்களுக்குள் பதில் அளிக்குமாறும் மேற்கு வங்க மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




