சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக ஆக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கபாலு இதனைக் கூறினார்.
இந்திக்கு ஒரு நீதி. தமிழுக்கு ஒரு நீதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




