தமிழன் போயிட்டான் சுடுகாடு, தேவையா செம்மொழி மாநாடு? என தமிழர் மீட்சி மாநாட்டில் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் நிலை குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட மாநாட்டில் பேசிய ராஜேந்தர், தமிழன் நிலை ஐயகோ என்றாகிவிட்டதே என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தமிழர்களி புனரமைப்பிற்காக இந்தியா கொடுத்த நிதியுதவியை, இலங்கை அரசு, சீன அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு புணரமைப்பு செய்ய முயல்வதாக கூறிய ராஜேந்தர். இதன் மூலம் சீன உளவாளிகள் இந்தியாவிற்குள் நுழைய கூடிய சாத்தியம் உண்டு என்று கூறினார். இதற்கிடையே பெயர் சாஸ்திரப்படி தனது பெயரை விஜய ராஜேந்தர் என மாற்றிக் கொண்ட அவர், தற்போது மீண்டும் பழைய பெயரான டி ராஜேந்தர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




