இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

E-mail அச்செடுக்க

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்