இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

வெறி நாய்கள் கடித்து குதறிய 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

E-mail அச்செடுக்க

சிறுபாக்கத்தில் சுற்றித் திரிந்த வெறி நாய்கள் கடித்து நான்கு பேர் படுகாயமடைந்தனர். சிறுபாக்கம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வீராக்கி (55), சேகர் (42), வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பூமாலை (31), ராமலிங்கம் (28). நால்வரும் தனித்தனியே நேற்று முன்தினம் மாலை கடைவீதி, பஸ் நிலையங்களில் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற வெறி நாய்கள் நால்வரையும் கடித்துக் குதறியது. பலத்த காயமடைந்த நால்வரும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், லப்பைக்குடிக்காடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்