பனகல் பூங்கா அருகில் சிலர் நின்று கொண்டு வாலிபர்களை விபசாரதிற்கு அழைப்பதாக சென்னை பாண்டிபஜார் போலீசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது ஆட்டோவில் 3 பெண்கள் வந்து இறங்கினர்.
சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 3 பேரும் விபசாரிகள் என்பது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் கும்பகோணத்தைச் சார்ந்தவர். மற்ற இருவரும் பெங்களூர் மற்றும் ஆந்திராவைச் சார்ந்தவர்கள்.
வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் விபச்சார புரோக்கர்களாகச் செயல்பட்ட பால்ராஜ், முத்துக்குமார் மற்றும் ஆட்டோ டிரைவர் அன்சாரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




