இணையத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகிள், தற்போது இணையமூலம் தொலைபேசும் சந்தையிலும் குதித்து விட்டது. தனது மின்மடல் வசதியான ஜிமெயிலின் உள்ளேயே இருந்து ஒரே சொடுக்கில் உலகின் எந்த மூலைக்கும் தொலைபேசும் வசதியை இன்று முதல் கூகிள் வழங்கி வருகிறது.
இவ்வாண்டு (2010) இறுதிவரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருக்கும் தொலைபேசி எண்களுக்கு இவ்வசதி மூலம் முற்றிலும் இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்தலாம் என்று கூகிள் கூறியுள்ளது. பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு 2 செண்ட்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 95 காசுகள்) மட்டுமே கட்டணமாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இணையத் தொலைபேசும் வசதி வழங்கும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் ஸ்கைப் நிறுவனத்திற்கு கூகிளின் இந்த அறிவிப்பு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என நுட்ப நோக்கர்கள் கருதுகின்றனர்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




