இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியைத் தாம் ஏற்கப் போவதில்லை என்று ஹம்பாந்தோட்டை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதே பதவியை ஏற்குமாறு இதற்கு முன்னரும் கட்சியின் தலைமை பலதடவை கோரிக்கை விடுத்த போதிலும், தாம் அவற்றை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், பதவியை ஒரு சூதாட்டமாகவோ, ஏலமாகவோ வைத்து அரசியல் இலாபமடையவோ, எத்தகைய சலுகைகளையும் அனுபவிக்கவோ தாம் விரும்பவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




