கரூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னி்ட்டு கரூரில் இன்று தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் - க்கு கநட்த ஆகஸ்ட் 25 ம் தேதி பிறந்த நாளாகும். இதனை முன்னி்ட்டு கரூரில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் முத்துராஜபுரத்தில் இருந்து மாவ்ட அவைத் தலைவர் தங்கவேல் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் , பெண்களும் பால்குடம் எடுத்து ஜவஹர் பஜாரில் உள்ள அருள் மிகு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அத்துடன் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வி.ஆர் சண்முகம் தலைமையில் பொது மக்களுக்கு எலுமிச்சை , தயிர், தக்காளி போன்ற சாதகங்களை அன்னதானம் வழங்கினர்.
இந்த விழாவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எம். விஸ்வநாதன், ரவிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி , மாவட்ட இளைஞர் அணி செயலளர் சுவாதி ரவி, கருணாநிதி, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் கார்த்திகேயன், பட்டதாரி ஆசிரியர்கள் அணி துணை செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

எழுதியவர்: karuvaimurugu, August 31, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




