ஞாயிறு அன்று ஒளிபரப்பான விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பெண், “தற்போது பலர் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூற. “இதை நீங்கள் யாரை மனதில் வைத்து சொன்னீர்கள்” என்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத் கேட்டார்.
அதற்கு அந்த பெண், “நடிகர் விஜய்க்குதான் சொல்கிறேன்” என்று கூறினார்.
தொகுப்பாளர் கோபிநாத் “அதை நீங்கள் அப்படியே நல்லா நேயர்கள் கேட்கிற மாதிரி சொல்லுங்க..” என்று கூறினார்.
அந்த பெண்ணுக்கு தனி குளோசப் வைத்து, “டியர் விஜய் இனி மேல் நீங்கள் தெலுங்கு டப்பிங் படங்களை பண்ணாதீங்க. பழைய கதையை எடுத்து பண்ணா தீங்க. ஒரே மாதிரியான படங்கள் என்று அரைத்த மாவையே அரைக்காதீர்கள்” என்று பேசினார்.
இதை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு கோபம் வந்து விட்டது.
இது பற்றி சூளைமேடு மேத்தா நகரை சேர்ந்த சூரியா கூறுகையில், “விமர்சனம் செய்வதாக இருந்தால் அவர்கள் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது அளித்தது ஏன்? என்று அவர்களுக்கு தெரியாதா?, விஜய் எக்ஸ்பிரஸ் வண்டிவிட்டது ஏன்? அந்த நிகழ்வுகளை படம் பிடித்து தங்களது டிவியில் ஒளிபரப்பு செய்து, அதன் மூலம் விளம்பரங்களை பெற்று வசூல் செய்யும் போது இது தெரியவில்லையா? இது கூட தாங்களுடைய நிகழ்ச்சியின் ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ள செய்யும் வேலைதானே? எங்களுக்கு தெரியாதா?..” என்று கொந்தளித்தார்.
தன் படத்தை ஓட்டுவதற்காக யாழ்நகரம், நான் தமிழன் என்று புகழ்பாடி தனக்கு தானே விளம்பரம் தேடிக்கொண்டிருக்கும் விஜய்க்கும், வட இந்திய முதலாளி பணத்தில் தமிழர்களை கொண்டாடுவதாய் படம் காட்டும் விஜய் டீவிக்கு 6 வித்தியாசம் கூட கிடையாது என்பது எல்லோரும் அறிந்ததே..
மேலும் என்ன கொடுமை என்றால் கேப் கிடைக்குபோதெல்லாம் விஜய்யை வாரும் நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் மத்தியிலேயே இது அரங்கேறியது மேலும் விஷயத்தை சூடாக்கி இருக்கிறது.

எழுதியவர்: ram, September 01, 2010
எழுதியவர்: siva, September 02, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|




