லண்டன் : மேட்ச் பிக்ஸிங் சம்பந்தமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களின் சக வீரரான யாசிர் ஹமீது பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளும் மேட்ச் பிக்ஸிங் மூலமே முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாளிதழக்கு அளித்த பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசிர் ஹமீது மேலும் கூறும் போது அனைத்து ஆட்டங்களின் முடிவுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதாக கூறினார். மேலும் தான் நன்றாக விளையாடி வெற்றி பெற போராடும் போது பிறர் வேண்டுமென்றே தோல்விக்காக போராடுவது தனக்கு கோபம் வருவதாகவும் கூறினார்.
மேலும் அப்பத்திரிகையில் ஒரு ஆட்டத்தில் சரியாக விளையாடாமல் இருப்பதற்காக 2,32,000 டாலர் வரை தயாராக இருந்ததாகவும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் பிரச்னை பெரிதாகி பின்னர் டாய்ன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் அவ்வாறு பேட்டி கொடுக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார்
லண்டன் : மேட்ச் பிக்ஸிங் சம்பந்தமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களின் சக வீரரான யாசிர் ஹமீது பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளும் மேட்ச் பிக்ஸிங் மூலமே முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாளிதழக்கு அளித்த பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசிர் ஹமீது மேலும் கூறும் போது அனைத்து ஆட்டங்களின் முடிவுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதாக கூறினார். மேலும் தான் நன்றாக விளையாடி வெற்றி பெற போராடும் போது பிறர் வேண்டுமென்றே தோல்விக்காக போராடுவது தனக்கு கோபம் வருவதாகவும் கூறினார்.
மேலும் அப்பத்திரிகையில் ஒரு ஆட்டத்தில் சரியாக விளையாடாமல் இருப்பதற்காக 2,32,000 டாலர் வரை தயாராக இருந்ததாகவும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் பிரச்னை பெரிதாகி பின்னர் டாய்ன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் அவ்வாறு பேட்டி கொடுக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




