சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை ரோட்டரி கிளப் சார்பில் கண் தான விழிப்புணர்வுப்பேரணி நடைபெற்றது. இந்தப்பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். நடிகர் விஜய் மற்றும் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தனர். இந்தப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் விஜய் இந்நிகழ்ச்சியில் திட்டமிட்டபடி பங்கேற்க முடியவில்லை. கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டதால் கூட்டத்தினரின் தலைக்கு மேலே நீந்தி வந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் அங்கு நின்ற வேனுக்குள் ஏறிக்கொண்டு, அங்கிருந்தபடியே கண் தானம் பற்றி பேசிவிட்டு புறப்பட்டார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




