இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

ரயில்முன் பாய்ந்து இளம் தாய் தற்கொலை

E-mail அச்செடுக்க

தன்னுடைய முதல் பிரசவத்துக்காகப் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாய் ஒருத்தி, குழந்தை பிறந்த பின்னர் நேற்று (05.09.2010) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் இரவுநேர கடுகதி ரயில்முன் பாய்ந்த மேற்படி இளம் தாய், நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என்பது மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மெதிரிகிரிய மீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான இந்த இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பான விசாரணைகள் பொலன்னறுவை சிறப்புப் பொலிஸ் பிரிவுத் தலைவர் சிரில் பிரனாந்து அவர்களின் தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்