புதுடில்லி : சர்வதேச அளவில், வால்மார்ட்டிற்கு அடுத்த மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான கேர்போர், இந்தியாவில் விற்பனை மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தங்கள் நிறுவனத்தின் சார்பில், முதல் மொத்த விற்பனை கேஷ் அண்ட் கேரி அவுட்லெட், டில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள சீலாம்பூரில் அமைக்கப்பட உள்ளதாகவும், இன்னும் 2 மாதங்களுக்குள் இந்த அவுட்லெட் அமைக்கப்படும் என்று கேர்போர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிராங்க் கென்னர் தெரிவித்துள்ளார்.
55 ஆயிரம் சதுர அடி பரபப்பளவில் கட்டப்பட உள்ள இந்த அவுட்லெட்டில், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களில் கிடைக்கும் பொருட்கள் இங்கு கிடைக்கும். மேலும் பல அவுட்லெட்களை இந்தியாவில் பல நகரங்களில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|




