இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அமைதிக்காக இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற சீனாவுக்கு விருப்பமாம்

E-mail அச்செடுக்க

பீஜிங்: தெற்காசியாவின் அமைதிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் தடம் பதிக்க சீனா முயற்சி செய்வதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறியிருந்த நிலையிலேயே, பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஜியாங் யூ மேற்கண்டவாறு கூறினார்.

ஆசியாவின் ஒரு முக்கியமான நாடு என்ற அடிப்படையில் தெற்காசியாவில் அமைதியும், நிலைத்தன்மையும் ஏற்பட இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது என்று கூறிய ஜியாங் யூ, தெற்காசியா உள்பட ஆசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க தமது நாடு உறுதி பூண்டுள்ளது என்றார்.

மேலும் இந்தியாவும், சீனாவும் வளரும் சக்திகளாக உருவெடுத்து வருவதாகவும், பொது நலன்கள் கருதி இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜியாங் தெரிவித்தார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: யாழ், September 08, 2010
கொலைக்கார நாடுக்ள் அமைதியைப்பற்றி பேசுவது ஏதோ சாத்தான் வேதம் ஓதுவது போல தெரியவில்லை. அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கவும் அங்கு அமைதியைக் குலைக்கவும், தமது சுதந்திரத்திற்காய் போராடும் போரளிகளை ஆயுதம கொடுத்து அழிப்பது என்றும் இந்த கொலைவெறி நாடுகள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த நாடுகளுக்கு அமைதியைப்பற்றி பேச என்ன அருகதை உள்ளது? smilies/angry.gifsmilies/angry.gif

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்