மும்பை : தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் இன்று 100 புள்ளிகள் அதிகரித்து 18,767.10 புள்ளிகளாக உள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 22.35 புள்ளிகள் அதிகரித்து 5,630.20 புள்ளிகளாக அதிகரித்தது.
அமெரிக்கச் சந்தையின் நேற்றைய உயர்வும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளின் இன்றைய உயர்வு நிலையும் இந்தியப் பங்குச் சந்தையில் தாக்கம் செலுத்தியது. ரியல்டி மற்றும் வங்கித்துறை பங்குகள் இந்த துவக்கத்தில் ஏறுமுகம் கண்டுள்ளன. ஹாங்காங் ஹாங்செங் 0.44%, ஜப்பான் நிக்கி 0.79% அதிகரித்துள்ளது.
2008 ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதிக்கு பிறகு தற்போது தான் சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




