இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு

E-mail அச்செடுக்க

நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குரான் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.

இத்தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குரான் எரிப்பு போராட்டம் நடந்தால், அது உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினருக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்றும் எனவே அதனை கைவிட வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பி.ஜே. கிரவ்லி இன்று கூறினார்.

ஆனால் பாஸ்டர் ஜோன்ஸ் புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குரான் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேவாலயத்தின் இந்த அறிவிப்புக்கு வாடிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாடிகன் விடுத்துள்ள அறிக்கையில், குரான் எரிப்பு இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை மூட்டிவிடும் என்றும், இஸ்லாமியர்களுடனான சுமூக உறவை பேணுவதில் வாடிகனுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூல்களையும், இடங்களையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சின்னங்களையும் மதிக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் (7)Add Comment
0
...
எழுதியவர்: குலாம், September 10, 2010
குர்ஆனை எரித்து அக்கிரமம் புரிந்தால் அதற்கான விளைவை கிறித்துவ சமூகம் எதிர்கொள்ள நேரிடும். இந்த விடயத்தை எந்த ஒரு முஸ்லிமும் சாதாரண நிகழ்வாக எடுத்து கொள்ள மாட்டான்.
0
...
எழுதியவர்: Ismail, September 10, 2010
In my opinion, jews diverting our mind thru this issue and trying to do some other thing silently against us
0
...
எழுதியவர்: Anver , September 10, 2010
let me do this thing, they will see in feture what hapend,every one know about muslims.
0
...
எழுதியவர்: Rahmath, September 10, 2010
humen not doing this way.
0
...
எழுதியவர்: Muslim, September 10, 2010
நல்ல மனிதன் செய்யும் வேலை இது அல்ல. புனிதமான கித்தாபு உலஹமே போற்றும் புனித குரான். முஸ்லிம்களின் இதயம்.
0
...
எழுதியவர்: காசிமேடு மன்னாரு, September 10, 2010
இன்று, கிறித்தவன் குரானை எரித்தால், நாளை இசுலாமியன் வேதாகமத்தை எரிப்பான், இப்படி மாற்றி மாற்றி எரிக்கும் போது எரிவது குரானும் பைபிலும் கீதையும் மட்டுமல்ல, மனிதர்களின் மனங்களூம் உடல்களும், அதிகமாகவே எரியும். மத நூல்களெல்லாம் எரியூட்டப் படவேண்டியதே... அது யாரால் நடக்கவேண்டும்? பகுத்தறிவுத் தெளிவு ஏற்பட்டு இசுலாமியன் அம்மததை விட்டு வெளியேறும் போது அவனால் மட்டுமே அது நடக்க வேண்டும், அதேபோல் கிறித்தவன் பைபிலை எரிப்பதும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் கீதை இராமாயணம் முதாலானவைகளை எரிப்பதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும், கடவுள் என்பது வெறும் கட்டுக் கதையே என்ற பகுத்தறிவு தெளிவு ஏற்பட்டபின் அவர்களால் மட்டுமே நடக்க வேண்டும்! இதுவல்லாமல், ஒருவன் புனிதமாகக் கருதும் ஒரு நூலை இன்னொரு மதத்தவன் எரிப்பதென்பது அவன் தலையில் அவனே கொள்ளி வைப்பதற்கு ஒப்பாகும், அப்படிப் பட்டவன் இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவமனை மட்டுமே... காசிமேடு மன்னாரு.kasimedumannaru789.wordpress.com.
0
...
எழுதியவர்: farook, September 16, 2010
Please Aviod world war# 3

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்