ஈத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நோன்பு மாதமான ரமலானின் முடிவைக் குறிக்கும் புதிய பிறை தோன்றுவது பொறுத்து ரமலான் நாளை வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமையோ கொண்டாடப்படுகிறது.
திங்களன்று பாதுகாப்புப் படையினரால் 4பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் முழுதும் வன்முறை மூண்டது. பாதுகாப்புப் படயினர் மீது கல்லெறி சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது. நேறு அனந்த்நாகின் சில பகுதிகளிலும் இது தொடர்ந்ததால் அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
ஆனால் நாளை ரமலான் பண்டிகையை முன்னிட்டு அங்கு ஊரடங்கு முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்தனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




